சீனாவில் கிடங்கு ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
Oct 24 2016 9:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் கிடங்கு ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாங்சி மாகாணத்தில் Xinmin பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு உள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்தன. வீடுகளின் அருகே நின்றிருந்த கார்கள் உள்ளிட்டவையும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து சென்ற 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 100 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.