விமானம் கீழே விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு - மால்டா நாட்டில் ஏற்பட்ட விபத்தில் ஃபிரான்ஸ் சுங்க அதிகாரிகள் பலியானதாக தகவல்
Oct 24 2016 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மால்டா நாட்டின் லுக்வா விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் ஒன்று, ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர்.
மால்டாவின் லுக்வா விமான நிலையத்திலிருந்து லிபியாவிற்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறுது நேரத்திலேயே விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தையடுத்து, அந்த இடமே புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த விபத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் சுங்கத் துறை அதிகாரிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள விமான நிலைய அதிகாரிகள், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை லுக்வா விமான நிலையம் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர்.