ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரைப் பகுதியில் அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவரை சுறாமீன் தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Oct 24 2016 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் உள்ள New South Wales கடற்கரைப் பகுதியில், அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவரை சுறாமீன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cape Byron தீபகற்பத்தில் உள்ள New South Wales கடற்கரைப் பகுதியில், 36 வயதான Jade Fitzpatrick என்பவர், இன்று காலை அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுறாமீன் ஒன்று அவரை தாக்கியது. அவரது இடது தொடைப்பகுதியில் சுறாமீன் கடித்ததால், ரத்தம் கொட்டியது. எனினும், சுறாமீனிடம் இருந்து தப்பித்து Jade Fitzpatrick கடற்கரையை வந்தடைந்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள், அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றதால், Jade, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இப்பகுதியில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக சுறாமீன் தாக்கியுள்ள சம்பவம் நடைபெற்றிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.