உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சாவி - இங்கிலாந்தில், 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

Oct 24 2016 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான, உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட சாவி ஒன்று 85 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுத் ஹாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்த, உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக், கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, அட்லான்டிக் கடலில் பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உள்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன்பிறகு, டைட்டானிக் கப்பலில் இருந்த மீட்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம்விடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், டைட்டானிக் கப்பலில் உயிர் காக்கும் மிதவைகளின் அலமாரியை திறக்க பயன்படுத்தப்பட்ட சாவி, இங்கிலாந்தில் ஏலம்விடப்பட்டது. இந்த சாவி 85 ஆயிரம் பவுண்டுக்கு, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00