ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓட்டம் : சோதனைச்சாவடிகள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரம்
Oct 24 2016 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதி நாட்டில், சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
வட அமெரிக்காவில், அட்லாண்டிக் கடலில் உள்ள மிகச் சிறிய தீவு நாடான ஹைதி தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே, ஆர்சாய் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் பல ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் சீருடை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், சாதாரண உடை அணிந்திருந்தனர். இந்த நிலையில், அந்த சிறை உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த 170 கைதிகள் தப்பி ஓடினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
தப்பி ஓடியவர்கள், சிறைக் காவலர்களின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சிறைக்காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனிடையே, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க ஹைதி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தப்பியோடியவர்கள் சாதாரண உடை அணிந்திருந்ததால், அவர்களைக் கண்டுபிடிக்கும் பணி சவாலாக உள்ளது. அருகில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களில் 11 பேர் இதுவரை பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.