இத்தாலி பிரதமர் மேற்கொண்டுள்ள அரசியல் சட்ட திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு - ரோம் நகரில் எதிர்க்கட்சியினர் முற்றுகைப் போராட்டம்

Oct 23 2016 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி பிரதமர் மேற்கொண்டு வரும் அரசியல் சட்ட திருத்தங்களால், நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ரோம் நகர வீதிகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலி நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாண்டு காலத்தில் பிரதமர் Mattero Renzi தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருவதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தங்களின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, பொருளாதார ரீதியில் நாடு சந்தித்துள்ள பின்னடைவை விளக்கும் வகையில் பல்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இத்தாலிய பிரதமர் Mattero Renzi அரசியலமைப்பு சட்டத்தில் சில அடிப்படை மாற்றங்களுடன் கூடிய மறுசீரமைப்பை கொண்டுவர முடிவு மேற்கொண்டுள்ளார். இதற்காக அரசியலமைப்பு சட்ட மறுசீரமைப்பிற்கான பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டு எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அரசியலமைப்பு சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக ரோம் நகரவீதிகளில் மக்களை ஒன்று திரட்டி எதிர்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00