சைபீரியாவில் இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து : 19 பேர் பலியான சோகம்
Oct 22 2016 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சைபீரியாவில் இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில், 19 பேர் உயிரிழந்தனர்.
சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தில் இருந்து Yamalo-Nenetsky மாகாணத்தில் உள்ள Urengoy நகரை நோக்கி 22 பேருடன் புறப்பட்ட Mi-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று, நேற்றிரவு Novy Urengoy பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிலைதடுமாறி தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.