அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மறுசுழற்சி மையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Oct 22 2016 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கலிஃபோர்னியா மாகாணத்தின் அன்டாரியோ பகுதியில் உள்ள மறுசுழற்சி மையத்தில் இருந்த மரக்கட்டைகளில் பற்றிய தீ, மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் உருவான கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த 75 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்துள்ள இடத்திற்கு அருகே விமான நிலையம் உள்ளதால், தீ மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி மையம் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சு திணறலுக்கு ஆளானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.