மொசூல் நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈராக் படைகள் தீவிரம் - ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கடும் சண்டை - கிர்குக் நகரில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தகவல்

Oct 22 2016 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமான மொசூல் நகரை கைப்பற்ற 5-வது நாளாக ஈராக் படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. கிர்குக் நகரை கைப்பற்ற நடந்த சண்டையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஐ.எஸ். படைகளின் தலைமையிடமான மொசூல் நகரை கைப்பற்ற ஈராக் ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்தச் சண்டையில் ஐ.எஸ். வசம் இருந்த பெரும்பகுதி இடங்களை ஈராக் ராணுவமும், குர்தீஷ் படையினரும் கைப்பற்றியுள்ளனர். கிர்குக் நகரை கைப்பற்ற கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளும் தொடர்ந்து எதிர்தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற சண்டையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசிரியன் கிருத்துவ கிராமத்தை கைப்பற்ற இன்று கடும் சண்டை நடைபெற்று வருகிறது. மொசூல் நகரத்தின் அருகேயுள்ள பெரும்பாலான இடங்களை ஈராக் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00