சிரியாவில் உள்நாட்டு போர் தாக்குதல்களில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு
Sep 29 2016 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவின் Aleppo நகரில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாக்குதல்களில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.
சிரியா அதிபர் Bashar al-Assad-க்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில், சிரியா ராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிரியாவின் முக்கிய நகரமான Aleppo-வை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்ற ராணுவத்தினர் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அங்கு குண்டு மழை பொழிந்து, ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் 5 வயது சிறுமி சிக்கித் தவித்தார். இதையறிந்த மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி அந்த சிறுமியை உயிருடன் மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.