தீவிரவாதிகள் வசமுள்ள Aleppo நகரை மீட்க சிரியா ராணுவம் தீவிரம் - ரஷ்யாவுடன் இணைந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பலி

Sep 24 2016 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் தீவிரவாதிகள் வசமுள்ள Aleppo நகரில், சிரியா மற்றும் ரஷ்ய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில், 25 பேர் பலியாகினர்.

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷ்யா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் அங்கு உள்நாட்டு போர் தலைதூக்கியுள்ளது. சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் Aleppo நகரை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகளிடமிருந்து மீட்க கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் விமானப்படையுடன் இணைந்து ரஷ்யா விமானப்படையினரும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். Aleppo நகரை நோக்கி முன்னேறி, அங்குள்ள Bustan al-Qasr மாவட்டத்தில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் விமானப்படைகள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடைபெற்ற விமான தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 47 பேர் பலியானதாகவும், தொடரும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததாகவும் திடுக்கிடும் தாகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00