சீனாவின் சூரிய குளியலை அனுபவிக்கும் பாண்டா கரடிகள் - ஏராளமானோர் கண்டு ரசிப்பு
Sep 24 2016 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாண்டா ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்க மையத்தில் பாண்டா குட்டிகள் சூரிய குளியலை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் காட்சிகள் வெளியாகிவுள்ளன.
சீனாவின் Sichuan மாகாணம், செங்டு நகரில் பாண்டா கரடிகளை பராமரிப்பதற்கென ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்க மையம் செயல்பட்டு வருகிறது. உலகில் அரிதாகிவரும் உயிரினமான பாண்டா கரடிகள் இங்கு மிகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில், பாண்டா கரடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி காமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள பாண்டா குட்டிகளுக்கு, ஊழியர்கள் சூரிய குளியல் அளித்தனர். சூரிய குளியலை பாண்டாக்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.