பாகிஸ்தான் அரசு, பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கைவிடாவிட்டால் அந்நாடு பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
Sep 24 2016 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், அந்நாட்டு ராணுவத்தினர் அடக்குமுறையைக் கையாண்டு வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் கடத்திச் சென்று சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பலுசிஸ்தான் மாகாணத்தில் அடக்குமுறை உள்ளிட்ட கொடுமைகளால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஐரோப்பிய யூனியன் துணைத் தலைவர் Ryszard Czarneck, பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு எதிரான கொடுமைகள் தடுக்கப்படாவிட்டால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடைகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.