ரஷ்யாவில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீ அணைப்பு வீரர்கள் 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்
Sep 23 2016 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீ அணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, கிடங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர், தீ விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்டனர்.