பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு போர் விமானங்கள் நள்ளிரவில் பறந்ததாக பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ள தகவலால் பரபரப்பு
Sep 23 2016 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்துக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எந்நேரமும் இந்தியா வான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இஸ்லாமாபாத் நகர் மீது அந்நாட்டு போர் விமானங்கள் நள்ளிரவில் பறந்ததாக பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் ஹமீத் மிர், டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு செய்தியை வெளியிட்டார். போர் ஆயத்த நடவடிக்கையின் விளைவாக விமானங்கள் பறந்ததாகக் கருதப்படும் நிலையில், மக்கள் அச்சம் அடைந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.