சிரியா உள்நாட்டு போரில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒமர் என்ற சிறுவனை, குடும்பத்துடன் சேர்க்க உதவ வேண்டும் என அதிபர் ஒபாமாவுக்கு, அமெரிக்க சிறுவன் உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளான்
Sep 23 2016 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியா அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அந்நாட்டு படையுடன் இணைந்து, ரஷ்ய படையும் போரிட்டு வருகிறது. அந்நாட்டின் 2-வது பெரிய நகரான அலெப்போவில் நிகழ்த்தப்பட்ட வான்வழித்தாக்குதலில், சேதம் அடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒமர் என்ற 5 வயது சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டான். ரத்தம் தோய்ந்த நிலையில் உடல் முழுவதும் தூசி படிந்து, திகைப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த சிறுவன் அமர்ந்திருந்த காட்சி இணையதளத்தில் வெளியாகி பலரது மனதையும் வேதனையடைச் செய்தது.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு உதவ வேண்டும் என அதிபர் ஒபாமாவுக்கு, அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். ஒமரின் குடும்பத்தினரை கண்டுபிடித்து, அவர்களுடன் சேர்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளான். சிறுவனின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இந்த கடிதத்தை, அமெரிக்கா உச்சிமாநாட்டில், அதிபர் ஒபாமா, அனைவரது முன்னிலையிலும் வாசித்தார்.