வங்காளதேசத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
Sep 23 2016 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டத்தைச் சேர்ந்த, 50 பேர் படகொன்றில் நேற்று சந்தியா ஆற்றை கடந்த போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்த ஒருசிலர் நீந்தி கரை சேர்ந்தனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களில் இன்னும் 25 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.