அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் காவல்துறை அதிகாரியால் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நெருக்கடி நிலை அமல்
Sep 23 2016 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், காவல்துறை அதிகாரியால் கருப்பு இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், சார்லட் நகரில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் நகரில் கருப்பு இனத்தைச்சேர்ந்த சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் என்பவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் காவல்துறையினரால் 3 கருப்பு இனத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களால் அப்பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த அராஜக செயலைக் கண்டித்து, கருப்பினத்தவர்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சார்லட் நகரில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி, வடக்கு மாகாண ஆளுநர் பேட் மெக்குரோரி உத்தரவிட்டுள்ளார்.