எகிப்து நாட்டில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு, மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 43 பேர் பலி
Sep 22 2016 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்து நாட்டில், 600 அகதிகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 43 பேர் பலியாகி உள்ள நிலையில், காணாமல் போனோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை எகிப்து அரசு உறுதி செய்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். விபத்திற்கான காரணம் குறித்து முழுமையான தகவல் வெளியாகாத நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் படகு மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அகதிகளின் படகுகள் அவ்வப்போது கடலில் மூழ்குவது, வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 2,800 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.