உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை பொதுமக்கள் காணும் வகையில், ஊர்வலமாக எடுத்துச் சென்றது
Sep 22 2016 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை பொதுமக்கள் காணும் வகையில், ஊர்வலமாக எடுத்துச் சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தன்மீது தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தைரியமூட்டும் வகையில், அந்நாட்டு அரசு தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை வெளிப்படையாக பொதுமக்கள் காணும் விதத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றது. இதில், அணுசக்தியால் இயங்கும் காவ்ரி உள்ளிட்ட ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை புறக்கணித்துள்ள பாகிஸ்தான், இந்தியா முதலில் தனது அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.