பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு அந்நாட்டு அரசு இழைத்து வரும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவத்து, நியூயார்க் நகரில் பலுசிஸ்தான் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Sep 22 2016 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் ஆளுகைக்குட்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தை பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என அங்குள்ள பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதற்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதால், உலகின் பல்வேறு நாடுகளிலும், பலுசிஸ்தான் ஆதரவு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தற்போது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, அங்கு திரண்ட பலுசிஸ்தான் ஆதரவு அமைப்பினர், பாகிஸ்தானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலுசிஸ்தானை விடுவிக்க வேண்டும் - மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க வேண்டும் என்பன போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் ஊர்வலமாகசென்றனர். பலுசிஸ்தானில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள் காணாமல் போயிருப்பதால், அதுகுறித்து நவாஸ் ஷெரீப்பிடம் ஐ.நா. கேள்வி கேட்க வேண்டும் என அப்போது பலுசிஸ்தான் அமைப்பினர் வலியுறுத்தினர். ஜம்மு-காஷ்மீர் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, பலுசிஸ்தான் மக்கள் நலனில் நவாஸ் ஷெரீப் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.