கடவுளின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : போப் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் திட்டவட்டம்
Sep 21 2016 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடவுளின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என போப் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் Assisi நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் சர்வ மத தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து கிறிஸ்தவ மதம், இஸ்லாம், புத்தமதம், சீக்கிய மதம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பல்வேறு மதங்களிடையே உள்ள வேறுபாடுகள் வைரஸ் கிருமி போல பரவி, உலகம் முழுவதும் தீவிரவாதச் செயல்கள் நடைபெற காரணமாக உள்ளதாக தெரிவித்தார். கடவுளின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என போப் திட்டவட்டமாக தெரிவித்தார்.