டாக்கா உணவு விடுதி தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை - பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் அதிரடி

Aug 27 2016 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

டாக்கா உணவு விடுதி தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிகளை, பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், வெளிநாட்டினர் அதிகம் கூடும் உணவு விடுதியில், கடந்த மாதம் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய பெண் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தலைநகர் டாக்கா அருகே Naraynganj பகுதியில், போலீசாருடன் இணைந்து பங்களாதேஷ் பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையும்படி கோரினர். இதனை புறக்கணித்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுடவே, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் டாக்கா தாக்குதலில் மூளையாக செயல்பபட்ட பயங்கரவாதி தமிம் அகமத் சவுதுரி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00