நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம் - தண்ணீரில் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு
Aug 26 2016 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்று நீரில் இருந்து மீட்கப்பட்ட 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகிறது. மேலும் சாலைகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், ரயுதாகத் மாவட்டம் பொகாராவில் உள்ள கயுர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சித்வான் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திரிசுலி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தால், கரைபுரண்டு ஓடும் நீரில் பேருந்து முழுவதும் மூழ்கியது. இதனால், வெளியே வரமுடியமால் பேருந்துக்குள் சிக்கித் தவித்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட 17 பேர் மருத்துவமனைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், இதேபோல் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.