தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக் கூடாது - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்
Aug 26 2016 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் என பாகிஸ்தானை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் முதல், அண்மையில் பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வரை அந்நாட்டில் தங்கி, இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இவர்களை, ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை வலியுறுத்தியும், பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் முக்கிய தலைவர்களைப் போல சுதந்திரமாக உலா வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களானாலும், அவர்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே பாகிஸ்தானில் மிக உயர்ந்தமட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.