நிலநடுக்கத்தின்போது கடைப்பிடிக்கப் பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் - ஜப்பானில் பிரம்மாண்ட ஒத்திகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Aug 26 2016 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் தற்காத்துக்கொள்வது குறித்து ஜப்பானில் பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகி பேரழிவை சந்திக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 49 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, தலைநகர் டோக்கியோவின் Ginza நகரில் நடைபெற்றது. இதில் ஏராளமான மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் 4 ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்று, தத்ரூபமாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஜப்பானில், கடந்த 2011-ம் ஆண்டு, ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.