பாகிஸ்தானில் ரோந்து சென்ற காவல்துறை வாகனங்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் உட்பட 6 பேர் உயிரிழப்பு
Aug 26 2016 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் ரோந்து சென்ற காவல்துறை வாகனங்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 போலீசார் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் உள்ள Gurdan பகுதி அருகே, உள்ளூர் நிர்வாக அதிகாரி தலைமையில் காவலர்கள் 2 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனங்கள் சோதனைச் சாவடியில் நின்றபோது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 5 போலீசார் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலை சுமார் 7 பேர் வரை நடத்தியிருக்கலாம் என Balochistan மாகாண உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.