மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி : வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான கோயில்கள் சேதம்
Aug 25 2016 8:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வரலாற்றுச்சிறப்புமிக்க ஏராளமான கோயில்கள் சேதமடைந்தன.
மியான்மரின் Mandalay பகுதியை மையமாகக் கொண்டு நேற்று சந்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளி எட்டாக இந்த நில நடுக்கம் பதிவானது. இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. Yenanchaung பகுதியில் இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நில நடுக்கத்தில் ஏராளமான கோயில்களும் சேதமடைந்தன. மிகவும் பழமைவாய்ந்த நகரமான Bagan-ல், கடந்த 11 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் கடுமையாக சேதமடைந்தன.