வடகொரியா பூமிக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்திய ஏவுகணை சோதனை மிகப்பெரிய வெற்றி : அதிபர் கிம்ஜாங் பெருமிதம்

Aug 25 2016 7:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியா பூமிக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்திய ஏவுகணை சோதனை மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு ஆயுத சக்தியில் வடகொரியா மேலும் முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது ஆயுத பலத்தை நிலை நாட்ட சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதற்கு ஐநா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பானுக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டது. வடகொரியா நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தங்கள் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அணுசக்தியில் மேலும் முன்னிலைப் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00