நிலநடுக்கத்தால் அதிர்ந்த இத்தாலி நகரங்கள் - 37 பேர் உயிரிழந்ததாக தகவல்
Aug 24 2016 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
இத்தாலியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோமில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக இது பதிவானது. Accumoli, Amatrice, Posta போன்ற நகரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகின. நிலநடுக்கத்தின்போது, சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் ரோம் நகரத்திலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.