அருணாச்சலப்பிரதேசத்தில் பல முறை அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்திய சீன ராணுவப் படைப்பிரிவுக்கு கவுரவப் பட்டம் வழங்கும் விவகாரத்தால் இந்தியா அதிர்ச்சி

Aug 23 2016 6:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் பல முறை அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்திய சீன ராணுவப் படைப்பிரிவுக்கு, கவுரவப் பட்டம் வழங்குவதற்கான உத்தரவில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. தான் ஆக்கிரமித்துள்ள தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடுகிறது. சீன வீரர்கள், பலமுறை அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா-சீனா இடையே 19 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தையொட்டி, திபெத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை ராணுவத்தின் படைப்பிரிவுக்கு கவுரவப் பட்டங்கள் வழங்க வகை செய்யும் உத்தரவுகளில் சீன அதிபர் Xi Jinping கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபரின் இந்தச் செயல், இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00