அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை விட அதிக செல்வாக்கு உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது
Jul 30 2016 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை விட அதிக செல்வாக்கு உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் ஆன்லைன் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற மக்கள் தங்கள் மனதுக்கு பிடித்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இதில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தேர்தலுக்கு சுமார் 100 நாட்கள் உள்ள நிலையில், ஹிலரி கிளிண்டன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.