ஃபிலிப்பைன்ஸ் அருகே மரியானா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7-ஆக பதிவு
Jul 30 2016 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடபசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஃபில்ப்பைன்ஸ் நாட்டுக்கு அருகே 14 தீவுகளை உள்ளடக்கிய பகுதிதான் மரியானா. இத்தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7-ஆக பதிவாகியுள்ளது. அக்ரிஹன் தீவில் இருந்து சுமார் 19 மைல் தொலைவிலும், 117 மைல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து முதற்கட்ட செய்திகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.