நாஜிக்களால் பத்து லட்சத்துக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் Auschwitz - Birkenau சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி
Jul 30 2016 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாஜிக்களால் பத்து லட்சத்துக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் Auschwitz - Birkenau சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தினார்.
போலந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸுக்கு, அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து அதிபர் Andrzej Duda-ஐ சந்தித்து பேச்சுக்கள் நடத்திய போப் ஃபிரான்சிஸ், Krakow நகருக்குச் சென்றார். அந்நகரில், போப் ஃபிரான்சிஸுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் Auschwitz - Birkenau சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தினார்.
போலந்து மக்கள் மீது இரக்கம் வைக்கவேண்டும் எனவும், அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னித்தருளவும் இறைவனை வேண்டுவதாகவும் Auschwitz - Birkenau சித்ரவதை முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் போப்பாண்டவர் தனது கருத்தை பதிவு செய்தார்.
ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட லட்ச்சணக்கான யூதர்கள், கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்பட்டு, ஜெர்மனி சர்வதிகாரி ஹிட்லரால் கொல்லப்பட்ட கொடுமையான வரலாற்றை கொண்டதுதான் இந்த Auschwitz - Birkenau சித்ரவதை முகாம் என்பது நினைவுகூரத்தக்கது.