இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக, 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது : குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
Jul 29 2016 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக, 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்துவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு, மரணதண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், உள்ளூர்வாசி ஒருவரும் போதை மருந்து கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் இந்த நான்குபேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி 4 பேரும் இன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இதே குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்தியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 பேருக்கு மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.