ப்ரசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருவாரமே உள்ள நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை
Jul 29 2016 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப்ரசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருவாரமே உள்ள நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ப்ரசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில், அடுத்த மாதம் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் முக்கிய நாடுகளான ப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அண்மையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக ப்ரசில் அரசு, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய Kalaoun என்ற 28 வயது இளைஞரை கைது செய்திருப்பதாக ப்ரசில் அரசு தெரிவித்துள்ளது. அவரது ஆன்லைன் நடவடிக்கைகளை கவனித்து வந்ததன் அடிப்படையில் அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், அவர் கைதுஇந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.