சிரியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் - இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 50 பேர் பலி
Jul 28 2016 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் குர்து இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளில், 50 பேர் பலியாகினர்.
துருக்கியையொட்டிய சிரியாவின் எல்லைப்புற நகரான QAMISHLI, குர்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நகரின் விமான நிலையத்தை அரசுப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்நிலையில், QAMISHLI நகரின் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருள் நிரப்பிய லாரி, பயங்கரமாக வெடித்தது. இதேபோல், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருள் நிரப்பிய மோட்டார் சைக்கிளும் வெடித்தது. இந்தத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த லாரி குண்டு வெடிப்பில், அருகிலிருந்த கட்டங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.