சீனாவில், பாண்டா கரடி மையத்தில் புதிதாக பிறந்துள்ள இரட்டை பாண்டா கரடிக் குட்டிகள் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி
Jul 27 2016 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் Macao பகுதியில் பாண்டா கரடிகளுக்கான மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பாண்டா கரடிகள் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. Xinxin என்ற பெண் பாண்டா கரடி கடந்த மாதம் இரட்டை ஆண் பாண்டா குட்டிகளை ஈன்றது. எடை குறைவாக பிறந்ததால், இந்தக் குட்டிகள் தனி அறையில் மிகுந்த பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்தக் குட்டிகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதால், பொதுமக்கள் பார்வையிட முதல்முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.