அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்க திரைமறைவு சதியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றச்சாட்டு
Jul 27 2016 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்க இணைய ஊடுருவல் உள்ளிட்ட திரைமறைவு சதியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சி தலைவர்களின் இ-மெயில்களை ரஷ்யாவை சேர்ந்த இணையதள ஹேக்கர்கள் உளவுபார்த்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியான இந்த தகவல் அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து கருந்து தெவித்துள்ள அதிபர் ஒபாமா, அரசு கணினிகளை மட்டுமல்லாமல், தனிநபர்களின் கணினிகளையும், ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஊடுருவி உளவுபார்த்து வருவதாகவும், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா சதி திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.