சோமாலியாவில் நடத்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 13 பேர் பலி : ஏராளமானோர் காயம்
Jul 27 2016 7:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சோமாலியாவில் நடத்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
சோமாலியா தலைநகர் Mogadishu-ல் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே இரண்டு தற்கொலை படை தாக்குதல்கள் நடைபெற்றன. விமானநிலையத்தின் வாயில் அருகே, சோதனைச் சாவடி பகுதியில் முதல் தாக்குதலும், விமானநிலையத்திற்கு சற்று தொலைவில் மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். இச்சம்பவத்தில் ஐ.நா. பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேரும், பொதுமக்கள் 4 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெளிநாட்டினரைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.