பங்களாதேஷில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை விரட்டியடிக்க பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கை : துப்பாக்கிச் சூட்டில் 9 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Jul 26 2016 8:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை விரட்டியடிக்க பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூட்டில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பங்களதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில், வெளிநாட்டு தூதரக பகுதியில் உள்ள ஸ்பெயின் உணவகத்தில் கடந்த 1ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டின் உள்பட 20 பேர் உயிரிந்தனர். மேலும், உணவு விடுதியில் இருந்த 40க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தும் மிரட்டினர். இதையடுத்து, நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்யான்பூர் அருகே பதுங்கி இருந்த 9 தீவிரவாதிகளை, அதிரடிப்படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். மேலும் சோதனை வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்கா துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.