சிரியாவில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதம்
Jul 26 2016 8:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவின் Aleppo நகரில், அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.
சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சிப்படையினருக்கு எதிராக, வான்வழித் தாக்குதலை அரசுப் படையினர் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களின் அருகில் நடத்தப்படுவதால், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் Aleppo நகரில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பகுதிகளில், வான்வழித் தாக்குதலில் அரசுப் படையினர் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. இருப்பினும், உயிரிழப்பு குறித்த தகவல்கள் இல்லை.