ஜப்பானில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புகுந்து கத்தியால் தாக்கிய மர்ம மனிதன் - 19 பேர் பலி - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Jul 26 2016 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்குள் புகுந்த மர்ம மனிதன், கத்தியால் தாக்கியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு அருகிலுள்ள சகமிஹரா நகரில் மாற்று திறனாளிகளுக்கான இல்லம் ஒன்று உள்ளது. இந்த இல்லத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 26 வயதுடைய அந்த நபர், அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00