கென்யாவில் உள்ள Amboseili தேசியப் பூங்காவில், விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அறிவிப்பு
Jun 25 2016 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கென்யாவின், நைரோபியில் அமைந்துள்ள Amboseili தேசியப் பூங்காவில் வரிக்குதிரைகள், யானைகள், மான்கள், புலிகள், சிங்கங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர், தேவையற்ற உணவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் பைகளையும், பூங்காவிற்குள் வீசுவதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், பல்வேறு விதிமுறைகள் போடப்பட்டுள்ளதாக, பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்களை வீசுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேவேளையில் பூங்காவை சுற்றி பார்ப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.