கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 2 பேர் பலி - 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மரங்கள் தீயில் கருகி நாசம்
Jun 25 2016 8:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 2 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மரங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.
கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க தீ அணைப்புப்படை வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 3 தீயணைப்பு வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ள நிலையில், 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மரங்கள் தீக்கிரையாகியுள்ளன. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.