ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயுதம் ஏந்திய கும்பல்களால் 7 இந்தோனேஷிய மாலுமிகள் கடத்தப்பட்டுள்ளதற்கு இந்தோனேஷிய அரசு கடும் கண்டனம்

Jun 24 2016 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா - ஃபிலிப்பைன்ஸ் நாடுகளிடையிலான கடற்பகுதியில், அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் Sulu கடற்பகுதியில், கடந்த 20-ம் தேதி ஆயுதம் ஏந்திய கும்பல்கள், இந்தோனேஷிய மாலுமிகள் 13 பேரை கடத்திச் சென்றனர். அவர்களில், 7 மாலுமிகளை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ள தீவிரவாதிகள், 6 பேரை விடுவித்தனர். மாலுமிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தோனேஷிய அரசு, மிகப்பெரிய அளவில் வர்த்தகப் போக்குவரத்து நடைபெறும் Sulu கடற்பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஃபிலிப்பைன்ஸ் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. முக்கிய வர்த்தக போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் Sulu கடற்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கடத்தல் சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00