அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளில் பரவிவரும் மஞ்சள் காய்ச்சலை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஆய்வு மையம் தகவல்
Jun 24 2016 7:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் எல்லைப் பகுதியில் வசித்து வரும் மக்கள், கடந்த சில வாரங்களாக மஞ்சள் காய்ச்சல் நோயினால் அவதிப்பட்டு வருகின்றன. கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்நோய் தாக்கியதில், 350 பேர் பலியானதாக உலக சுகாதார ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே, அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளுக்கு கூடுதலாக மருந்துப்பொருட்கள், மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மஞ்சள் காய்ச்சல் நோய் குறித்து, மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.