கொலம்பியாவில் 50 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது
Jun 23 2016 7:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் புரட்சிப்படைக்கும் ராணுவத்திற்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற இருதரப்பு பேச்சவார்தையில் சண்டை நிறுத்தத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் சுவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் புரட்சிப்படையின் தலைவன் ரோடிங்கோவும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் 50 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.