நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்சினை ஏற்பட்டதால் உடனடியாக மூடப்பட்டது
May 26 2016 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்சினை ஏற்பட்டதால், உடனடியாக மூடப்பட்டது. எனினும், திட்டமிட்டப்படி இன்று வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தீவுக் கண்டத்தில் அமைந்திருக்கும் மிகச்சிறிய நாடான நியூசிலாந்து இயற்கை அழகை மிகுந்ததாகும். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்தனர். மேலும், நாடாளுமன்ற வளாக பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் உடனடியாக அகற்றினர். தற்போது, நாடாளுமன்ற வளாகம் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அச்சுறுத்தல் பற்றி கவலைகொள்ள வேண்டியதில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஏறக்கெனவே திட்டமிட்டப்படி நியூசிலாந்தின் பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.