அஃப்கனிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி
May 25 2016 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கனிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.
அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில், தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர், படுகயாமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாலிபான் அமைப்புத் தலைவர் Mullah Akhtar Mansour கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லபபட்டதையடுத்து, தீவிராதிகள் இந்த தாக்குதலை தொடுத்துள்ளதாக காபூல், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து, அந்நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.